மானாமதுரையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு


மானாமதுரையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 30 Oct 2022 6:45 PM GMT (Updated: 30 Oct 2022 6:45 PM GMT)

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியையொட்டி மானாமதுரை வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியையொட்டி மானாமதுரை வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக நேற்று காலை காரில் சென்றார். அவருக்கு மானாமதுரையில் அவரது அணியின் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞணி செயலாளர் வக்கீல் சுந்தரபாண்டியன், சிவகங்கை நகர் செயலாளர் கே.வி.சேகர், சிவகங்கை ஒன்றிய செயலாளர்கள் வல்லனி முத்துப்பாண்டி (தெற்கு), சித்தலூர் ராஜா என்ற ராஜாராம் (மேற்கு), மாவட்ட கவுன்சிலர் பில்லூர் கே.பி. ராமசாமி, கிளுவச்சி தங்கவேலு, சிறியூர் பழனி, இளையான்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் கிருஷ்ணபிரபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரதிதீபன், மானாமதுரை முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் முத்துராஜா, மானாமதுரை ஒன்றிய செயலாளர்கள் நெட்டூர் ஜெயராமன், கட்டிக்குளம் பாலா, தீயனூர் பாலா, தொழிலதிபர் அழகர், கீழபசலை அர்ச்சுனன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கல்லல் ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர்கள் சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், ஜெயலலிதா பேரவை பெரியகருப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

டி.டி.வி. தினகரனுக்கு வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்த வந்த டி.டி.வி. தினகரனை முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் புஷ்பா லீலா கிருஷ்ணன் வரவேற்றார்.


Next Story