மேலகூட்டுடன்காடு கிராமத்தில்ரேஷன் அரிசி பறிமுதல்


மேலகூட்டுடன்காடு கிராமத்தில்ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:46 PM GMT)

மேலகூட்டுடன்காடு கிராமத்தில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள மேலகூட்டுடன்காடு கிராம பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைபொருள் வழங்கல் தனி தாசில்தார் ஜான்சன் தேவசகாயத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள 2 இடங்களில் மொத்தம் 13 மூட்டைகளில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக அதிகாரிகள் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story