நாசரேத்தில்தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு


நாசரேத்தில்தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:45 PM GMT)

நாசரேத்தில் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டப்பட்டனர்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜீவானந்தம் (வயது 65). இவருக்கு எபநேசர் என்ற மனைவியும், டேவிட் அழகு ரத்தினம் (வயது 37), ஐசக் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பிரான்சிஸ் ஜீவானந்தம் சொந்தமாக லாரி வைத்து குடிநீர் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். டேவிட் அழகு ரத்தினத்திற்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் கடந்த 22-ந்தேதி பிரான்சிஸ் ஜீவானந்தம் திடீரென மாரடைப்பால் இறந்தார். இதற்கான துக்க நிவர்த்தி ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், டேவிட் அழகு ரத்தினம் தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தாய்க்கு ஆதரவாக ஐசக் பேசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேவிட் அழகு ரத்தினம் அரிவாளால் ஐசக்கின் காலில் வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த எபநேசருக்கும் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட் அழகு ரத்தினத்தை கைது செய்தனர்.


Next Story