பழனி கோட்ட பகுதியில் பேரிடர் காலத்தில் மின்விபத்து புகாருக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு


பழனி கோட்ட பகுதியில்  பேரிடர் காலத்தில் மின்விபத்து புகாருக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு
x

பழனி கோட்ட பகுதியில் பேரிடர் காலத்தில் ஏற்படும் மின்விபத்து தொடர்பாக புகார் தெரிவி்ப்பதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்


பழனி கோட்ட மின்வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


பழனி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பேரிடர் காலத்தில் மின்விபத்து மற்றும் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி பழனி, சிவகிரிப்பட்டி, அ.கலையம்புத்தூர், நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், பாலாறு, பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, அய்யம்பாளையம், காவலப்பட்டி, வே.பா.புதூர், இரவிமங்கலம், சித்தரேவு, அய்யம்புள்ளி, பெருமாள்புதூர், பெரியகலையம்புத்தூர், பெரியம்மாபட்டி ஆகிய பகுதிகளுக்கு 9445852778 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.


மானூர், கே.ஜி.வலசு, புளியம்பட்டி, மொல்லம்பட்டி, வில்வாதம்பட்டி, தும்பலபட்டி, அக்கரைப்பட்டி, நரிக்கல்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, சின்னக்கலையம்புத்தூர், சித்திரைக்குளம், தாதநாயக்கன்பட்டி, தாளையூத்து, மிடாப்பாடி, நாகூர், சுக்கமநாயக்கன்பட்டி, புஷ்பத்தூர், வயலூர், சாமிநாதபுரம் ஆகிய பகுதி மக்கள் 9445258779 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


ஆயக்குடி, பொன்னாபுரம், கோம்பைபட்டி, சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, தாசரிப்பட்டி, வீரலப்பட்டி, பெரியகோட்டை, தேவத்தூர், கொத்தயம், சிந்தலவாடம்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, வாகரை, வேப்பன்வலசு, மரிச்சிலம்பு, அப்பனூத்து, புங்கமுத்தூரு, வேலம்பட்டி, கீரனூர், பெரிச்சிபாளையம், மேல்கரைப்பட்டி, கொழுமம்கொண்டான், கோரிக்கடவு, சங்கம்பாளையம், முத்துநாயக்கன்பட்டி ஆகிய பகுதி மக்கள் 9445852780 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Related Tags :
Next Story