சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,040-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.1,040-க்கு ஏலம்
x
ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,040-க்கும், முல்லை ரூ.360-க்கும், காக்கடா ரூ.350-க்கும், செண்டுமல்லி ரூ.41-க்கும், பட்டுப்பூ ரூ.31-க்கும், சாதிமல்லி ரூ.625-க்கும், கனகாம்பரம் ரூ.320-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும் செவ்வந்தி ரூ.100-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும் ஏலம் போனது.


Next Story