சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,260-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,260-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,260-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,260-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் 770 ரூபாய் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

ஏலம்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,260-க்கும், முல்லை ரூ.1,350-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.98-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

ரூ.770

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு 30-க்கும், முல்லை ரூ.1,280-க்கும், காக்கடா ரூ.750-க்கும், செண்டுமல்லி ரூ.140-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.770-ம், காக்கடா ரூ.150-ம், செண்டுமல்லி ரூ.42-ம், பட்டுப்பூ ரூ.10-ம், சம்பங்கி ரூ.40-ம், அரளி ரூ.20-ம், செவ்வந்தி ரூ.20-ம் குறைந்து விற்பனை ஆனது. ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.770 விலை குறைந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

விவசாயிகள் கவலை

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இன்று (அதாவது நேற்று) ஆங்கில புத்தாண்டு என்பதால் கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும், தமிழக வியாபாரிகளும் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) போட்டி போட்டு பூக்களை அதிக விலைக்கு ஏலம் எடுத்தார்கள். தற்போது விசேஷ நாட்கள் இல்லாததால் பூக்கள் தேவை குறைந்துவிட்டது. இதனால் பூக்கள் விலை கடுமையாக குறைந்து விற்பனை ஆனது,' என்றனர்.


Next Story