தெற்கு கோவங்காட்டில்பத்திரகாளிஅம்மன் கோவில் கொடை விழா


தெற்கு கோவங்காட்டில்பத்திரகாளிஅம்மன் கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 7 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 6:46 PM GMT)

தெற்கு கோவங்காட்டில் பத்திரகாளிஅம்மன் கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள தெற்குகோவங்காடு கிராமத்திலுள்ள பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இ்வ்விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பங்கேற்ற திருவிளக்குபூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எஸ்.அழகேசன் நாடார் செய்திருந்தார்.


Next Story