தாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை வேரோடு மரம் சாய்ந்தது; போக்குவரத்து பாதிப்பு


தாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை வேரோடு மரம் சாய்ந்தது; போக்குவரத்து பாதிப்பு
x

தாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை வேரோடு மரம் சாய்ந்தது; போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

தாளவாடி

தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் இரவு முழுவதும் தூறிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள பழமையான மே பிளவர் மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அங்கு சென்று ரோட்டில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீரானது.

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் தாளவாடி-தொட்டகாஜனூர் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story