சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்  தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை  கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடலூர்

பண்ருட்டி தாலுகா முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 57). தொழிலாளி. இவர் தற்போது வடலூர் காட்டுக்கொல்லை அந்தோதயாநகரில் வசித்து வருகிறார். இங்கு தாய், தந்தையை இழந்த 11 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது அத்தை வீட்டிலேயே கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சிறுமியின் அத்தை கடந்த 13.10.2021 அன்று மளிகை சாமான்கள் வாங்குவதற்காக பண்ருட்டிக்கு சென்று விட்டார். இதனால் வீட்டை பூட்டி விட்டு கடையை அந்த சிறுமி கவனித்து வந்தார். இதை அறிந்த ஆனந்தன், அந்த கடைக்கு சென்று, சிறுமியிடம் உனது அத்தை பொருட்கள் வாங்குவதற்காக ரூ.1000 கேட்டார். அந்த பணத்தை எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

உடன் அந்த சிறுமியை பணத்தை எடுத்த போது, வீட்டுக்கதவை திறந்து பணத்தை தா என்று ஆனந்தன் கேட்டுள்ளார். அதற்கு சிறுமியும் கதவை திறந்த போது, அவர் அத்துமீறி உள்ளே புகுந்து, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கன்னத்தில் அறைந்து, இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

இது பற்றி சிறுமியின் அத்தை நெய்வேலி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் ஆனந்தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இழப்பீடு

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரசு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். ஏற்கனவே ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டதால் மீதி ரூ.4½ லட்சத்தை 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.


Next Story