சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்தலைமறைவாக இருந்த சிறுவன் போக்ேசாவில் கைது


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்தலைமறைவாக இருந்த சிறுவன் போக்ேசாவில் கைது
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிறுவன் போக்ேசாவில் கைது

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அக்காள், தங்கை இருவரும் அய்யர்பாடி எஸ்டேட் ரோப்வே பயணிகள் நிழற்குடை பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் அவர்களுக்கு தொல்லை கொடுத்து தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வால்பாறை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை கோவை-செல்வபுரம் பகுதியில் வைத்து வால்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

1 More update

Next Story