மாவட்டத்தில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்க நிதி ஒதுக்கீடு


மாவட்டத்தில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்க நிதி ஒதுக்கீடு
x

மாவட்டத்தில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையம்

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்திலும், ஒருசில இடங்களில் வாடகை கட்டிடத்திலும் இயங்கி வருகின்றன. மேலும் சில ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் பழுது ஏற்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன. 39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

குடியிருப்புகள்

கடம்பூர் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தங்குவதற்காக 2 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்க உள்ளது. ஓசூரில் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதியில் சேசன் நகர், தாளவாடியில் துணை சுகாதார நிலையம் குடியிருப்புடன் அமைய உள்ளது.

இந்த பணிகள் நிறைவடையும்போது மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப துணை சுகாதார நிலையங்களும் சொந்த கட்டிடத்தில் செயல்படும் என ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story