பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில்  முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் கூறினார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை விண்ணப்பித்து, வைப்புத்தொகை பத்திரம் பெற்ற பயனாளிகளில், முதிர்வு தொகை கிடைக்கப் பெறாத பயனாளிகள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட பத்திர நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பயனாளியின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் சமூக நல விரிவாக்க அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04546-254368 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story