போடியில்போக்குவரத்துக்கு இடையூறு; 2 பேர் கைது


போடியில்போக்குவரத்துக்கு இடையூறு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

போடியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அறிவுத்திருக்கோவில் மற்றும் தேவர் காலனி பகுதியில் 2 பேர் சாலையில் நின்று கொண்டு ஆபாசமாக பேசி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் கேட்காமல் சத்தமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போடி அருகே உள்ள அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த வினோத் குமார் (வயது 28), போடியைச் சேர்ந்த முருகன் (62) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story