போடியில்போக்குவரத்துக்கு இடையூறு; 2 பேர் கைது

போடியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அறிவுத்திருக்கோவில் மற்றும் தேவர் காலனி பகுதியில் 2 பேர் சாலையில் நின்று கொண்டு ஆபாசமாக பேசி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் கேட்காமல் சத்தமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போடி அருகே உள்ள அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த வினோத் குமார் (வயது 28), போடியைச் சேர்ந்த முருகன் (62) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





