போடியில்டாஸ்மாக் கடையில் திருட முயற்சி : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


போடியில்டாஸ்மாக் கடையில் திருட முயற்சி : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 11:47 AM GMT)

போடியில் டாஸ்மாக் கடையில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

போடி,

போடி மீனாட்சி நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் போடி ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்த குமரன் என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். கடந்த 1-ந்தேதி இவர், வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மதியம் அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் பொருட்கள் ஏதும் திருடுபோகவில்லை. இதுகுறித்து அவர் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திருட முயன்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story