திருவாரூரில், 1 கிலோ மல்லிகை பூ ரூ.120-க்கு விற்பனை


திருவாரூரில், 1 கிலோ மல்லிகை பூ ரூ.120-க்கு விற்பனை
x

திருவாரூரில், 1 கிலோ மல்லிகை பூ ரூ.120-க்கு விற்பனை

திருவாரூர்

திருவாரூரில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் 1 கிலோ மல்லிகை பூ ரூ.120-க்கு விற்பனையானது.

பூக்கள் விலை

திருவாரூரில் உள்ள கடைவீதியில் ஏராளமான பூ கடைகள் உள்ளன. இந்த பூ மார்க்கெட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். அப்போது அதற்கேற்றார் போல் பூக்களின் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும்.

விலை குறைவு

அதேபோல் மழை காலத்திலும், பனிக்காலத்திலும் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால், வரத்து குறைவாக இருக்கும். இதனால் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும். அதன்படி திருவாரூர் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து உள்ளது.

கடந்த வாரம் 1 கிலோ ரூ.270-க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.120-க்கு விற்பனையானது. ரூ.300- க்கு விற்பனையான முல்லை பூ ரூ.250-க்கு விற்கப்பட்டது. சம்பங்கி ரூ.100-க்கும், ரோஸ் ரூ.120-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.160-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், பிச்சி பூ ரூ.200-க்கும் விற்பனையானது.

வரத்து அதிகரிக்கும்

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பூக்களின் தேவை அதிகம் இருந்தது. இதன் காரணமாக பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. பூக்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி விட்டதால் பூக்கள் விலை குறைந்துள்ளது. மல்லிகை பூவை பொருத்தவரையில் வெயில் அதிகம் இருந்தால் அதிக பூக்கள் பூக்கும். இதனால் வரத்து அதிகரிக்கும். அதன்படி தற்போது வெயில் அதிகளவில் அடித்து வருவதால் பூக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைய தொடங்கிவிட்டது என்றார்.


Related Tags :
Next Story