விஷ விதை என்று தெரியாமல் தின்ற 8 சிறுவர், சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை


விஷ விதை என்று தெரியாமல் தின்ற  8 சிறுவர், சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை
x

விஷ விதை என்று தெரியாமல் தின்ற 8 சிறுவர், சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே ஜீமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த 3 குடும்பங்கள் வந்து தங்கி. பாகலூர் பகுதியில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் பிகி குமார் (வயது 10), விஷால் குமார் (5), விஷால் (3) மற்றும் சிறுமிகள் பவிதா குமார் (8), சிபர்னி (5), பார்வதி (4), சோனாகுமாரி (3) ராதிகா (5) ஆகிய 8 பேரும் நேற்று விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு கிடந்த விஷ விதை என்று தெரியாமல் அதை எடுத்து சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் சிறுவர், சிறுமிகள் அனைவரும் வாந்தி எடுத்து வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனர். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக சிறுவர், சிறுமிகளை மீட்டு ஓசூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story