தூத்துக்குடியில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


தூத்துக்குடியில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

கோர்ட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய நடைமுறையை தொடர வலியுறுத்தியும் தூத்துக்குடியில் வக்கீல்கள் நேற்று முன்தினம் முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வக்கீல்சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story