தூத்துக்குடியில்வக்கீல்களுக்கான கபடி போட்டி


தூத்துக்குடியில்வக்கீல்களுக்கான கபடி போட்டி
x
தினத்தந்தி 27 Aug 2023 6:45 PM GMT (Updated: 27 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் வக்கீல்களுக்கான கபடி போட்டி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்களுக்கான மாநில அளவிலான கபாடி போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தன. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து வக்கீல்கள் அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டி தொடக்க விழாவுக்கு தூத்துக்குடி வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.

போட்டிகளை வக்கீல் ஸ்டீபன் அந்தோணிராஜ் வீரர்களை அறிமுகம் செய்து வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் வேலு கார்த்திகேயன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், உற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், வக்கீல்கள் மார்க்ஸ், பூங்குமார், கிஸ்சிங்கர், சுதா பிரின்சி உள்பட பலரும் கலந்து கொண்டனர். இறுதி போட்டிகள் நேற்று இரவு நடந்தன.


Next Story