தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர் திடீர் சாவு

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர் திடீரென இறந்து போனது குறித்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜோன்ஸ்ராஜ் (வயது 57). மின்சார வாரிய ஊழியர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று, அதே பகுதியில் தனது மனைவி வேலைசெய்யும் இடத்துக்கு சென்றாராம். அப்போது குடிபோதையில் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டுக்கு வந்த ஜோன்ஸ்ராஜ் திடீரென இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





