தூத்துக்குடியில் தொழிலாளி தூக்கு போட்டு சாவு


தூத்துக்குடியில் தொழிலாளி தூக்கு போட்டு சாவு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 23). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள அறையில் படுத்து இருந்தாராம். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால், உறவினர்கள் மேல் அறைக்கு சென்று பார்த்து உள்ளனர். அங்கு பெரியசாமி தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story