தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தில் உலக யோகா தினம்


தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தில் உலக யோகா தினம்
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 9:09 AM GMT)

தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி செயலாளர் ஷகீலா ஆனந்த் தலைமை தாங்கி பேசினார். யோகா ஆசிரியர் அமுதா, மாணவ, மாணவிகளுக்கு ஆசனங்கள் செயல்முறைகள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள், மூச்சுப்பயிற்சி குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story