புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா
சேரன்மாதேவி அருகே புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி யூனியன் பொட்டல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. நெல்லை உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் தலைமை தாங்கி, புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். விழாவில் சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜம், பொட்டல் கிராம பஞ்சாயத்து தலைவர் மாரிசெல்வி, துணைத் தலைவர் அரிராம் சேட், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மூலச்சி சீவலமுத்துகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story