புதிய பேருந்து நிலையம் திறப்பு: தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசு - அமைச்சர் சேகர் பாபு


புதிய பேருந்து நிலையம் திறப்பு: தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசு  -  அமைச்சர் சேகர் பாபு
x

புதிய ரெயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை,

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். அத்துடன், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர் பாபு ,

புதிய பேருந்து நிலையம் திறப்பு, தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசு. நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகளை 28 மாதங்களில் முடித்துள்ளோம். ரூ.90 கோடி அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் 2,130 பேருந்துகளை இயக்கும் அளவுக்கு வசதி உள்ளது. . நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தலாம் . புதிய ரெயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.


Next Story