புதிய சிமெண்டு சாலை திறப்பு


புதிய சிமெண்டு சாலை திறப்பு
x
தினத்தந்தி 11 Jun 2023 12:30 AM IST (Updated: 11 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே புதிய சிமெண்டு சாலை திறப்பு நடைபெற்றது.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் கோவிந்தபேரி ஊராட்சி நடுத்தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.17.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

துணைத் தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் இளவரசி பார்த்திபக் கண்ணன், பொன்னுத்தாய் முருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன் ஓய்வு வனத்துறை மாணிக்கம், மக்கள் நல பணியாளர் கிருஷ்ணன், மாரித்துரை, குமார், தங்கசாமி, வெள்ளத்துரை, சுப்பையா, மணியன், காளிமுத்து, கணேசன், முப்புடாதி, சுப்ரரி, சாமுவேல், அந்தோணி பிரியா, அன்னம்மாள் செல்வி, தேன்மொழி இசக்கியம்மாள் மற்றும் தூய்மை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மூக்காண்டி நன்றி கூறினார். இதில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


1 More update

Next Story