ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா


ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா
x
தினத்தந்தி 15 Sept 2023 12:30 AM IST (Updated: 15 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கருவந்தா ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவந்தா ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.

இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பால்துரை, கிருஷ்ணம்மாள் வெங்கடேஷ், மண்டல தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரூபி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story