மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு; டன் ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை


மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு; டன் ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை
x

மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்தது. டன் ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

கரூர்

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை உயர்வடைந்து ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.8 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை உயர்வடைந்து ரூ.9 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. ‌மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story