தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு


தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு
x

தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை 3600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஊரகப்பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியத்தை 3600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 396 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.


Next Story