ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வு


ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வு
x

பரமத்திவேலூரில் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் சர்க்கரை விற்பனை ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.

நாமக்கல்

பொங்கல் பண்டிகை

பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பரமத்தி, பாண்டமங்கலம், செங்கப்பள்ளி, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச்சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

விலை உயர்வு

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200-க்கும், அச்சு வெல்லம் ரூ.1,200-க்கும் ஏலம் போனது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் உருண்டை வெல்லம் 30 கிலோ கொண்ட சிப்பம் ஒன்று ரூ.1,320-க்கும், அச்சு வெல்லம் 30 கிலோ கொண்ட சிப்பம் ஒன்று ரூ.1,300-க்கும் ஏலம் போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விலை உயர்வடைந்துள்ளதால் வெல்ல ஆலையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story