மரவள்ளி கிழங்கு விலை உயர்வு


மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
x

மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துபாளையம், குந்தாணி பாளையம், வேட்டமங்கலம், வடுகபட்டி, ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், மூலமங்கலம், புன்னம்சத்திரம், பழமாபுரம், பேச்சிப்பாறை, நடையனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளி கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கை வாங்கி மல்லூர், நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், சின்ன சேலம், கீரனூர், புதுச்சத்திரம், புதன் சந்தை, மலவேப்பங்கொட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

மரவள்ளி கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒனறு ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் ‌மரவள்ளி‌ கிழங்கின் விலை தொடர்ந்து உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளி கிழங்கு விலை அதிகரித்துள்ளதால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story