கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து உள்ளது.
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இதில் 85 விவசாயிகள் 520 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 7 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
282 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோவுக்கு 75 ரூபாய் 50 காசு முதல் 82 ரூபாய் 35 காசு ஏலம் விடப்பட்டது. 238 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோவுக்கு 59 ரூபாய் 50 காசு முதல் 73 ரூபாய்க்கு ஏலம் போனது.
இதன் மூலம் கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் கிலோவுக்கு 35 காசு அதிகம் கிடைத்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கொப்பரை தேங்காயை உற்பத்தி செய்வது அதிகரித்து உள்ளது.
இதனால் கடந்த வாரத்தை விட 43 மூட்டை கொப்பரை அதிக ரித்து உள்ளதாக ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்






