ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரிப்ப


ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரிப்ப
x
தினத்தந்தி 9 Aug 2022 2:07 PM GMT (Updated: 9 Aug 2022 2:09 PM GMT)

ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:-

ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

கர்நாடக மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 360 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.40 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கலில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த் துறையினர் ஒகேனக்கல்லில் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.


Next Story