குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்

குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சீசன் காலங்களில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று வார விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





