திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு; 10-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை


திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு; 10-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 10-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

'குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவிக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 10-வது நாளாக பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.


Next Story