நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை


நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

அம்பை,

நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம் வனக்கோட்ட மணிமுத்தாறு, மாஞ்சோலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவி பகுதியை பார்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றும், அருவிகளில்குளிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

நீர்வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அம்பாசமுத்திரம் வன உயிரின காப்பாளரும் புலிகள் காப்பக துணை இயக்குனருமான செண்பக பிரியா தெரிவித்துள்ளார்.


Next Story