மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!


மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
x

காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சேலம்,

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் கன அடி வீதமும், அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதமும் கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்து உள்ளதன் காரணமாக காவிரியின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story