கோவிந்தபேரி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா


கோவிந்தபேரி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே கோவிந்தபேரி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

கடையம்:

கோவிந்தப்பேரி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தேசியகொடியினை ஏற்றினாார். பின்னர் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக துணை ஆட்சியர் கவிதா பங்கேற்றார். ஊராட்சி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி திருமலை முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இதில் ஊராட்சி செயலர் பா.மூக்காண்டி வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இசேந்திரன் நன்றி கூறினார்.. நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மாரிதுரை சிங்கக்குட்டி|வெள்ளத்துரை, ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 76 மரக்கன்றுகள் நடப்பட்டது.

1 More update

Next Story