மண்டபம் யூனியன் பகுதியில் சுதந்திர தினவிழா


மண்டபம் யூனியன் பகுதியில் சுதந்திர தினவிழா
x

மண்டபம் யூனியன் பகுதியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் பகுதியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.

யூனியன் அலுவலகம்

மண்டபம் யூனியன் பகுதியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. உச்சிப்புளியில் உள்ள மண்டபம் யூனியன் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு ஆணையாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், யூனியன் துணை தலைவர் பகவதி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அலுவலக மேலாளர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சபியாராணி, தவ்பீக் அலி, பேச்சியம்மாள் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனர். மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ராஜா தேசியக்கொடி ஏற்றினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு) இளவரசி முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் முனியசாமி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

இதேபோல ஊராட்சி தலைவர்கள் அழகன்குளம் வள்ளி, ஆற்றாங்கரை முகமது அலி ஜின்னா, ரெட்டையூரணி கணேசன், இருமேனி சிவக்குமார், என்மனங்கொண்டான் கார்மேகம், காரான் சக்திவேல், கீழநாகாச்சி ராணி, கும்பரம் துளசிதேவி, சாத்தக்கோன்வலசை நாகேசுவரி, செம்படையார்குளம் கண்ணம்மாள், தாமரைக்குளம் களஞ்சியலட்சுமி, தேர்போகி மோகன்குமார், பட்டணம்காத்தான் சித்ரா மருது, பனைக்குளம் பவுசியாபானு, பிரப்பன்வலசை கலா உடையார், புதுமடம் காமில்உசேன், புதுவலசை மீரான்ஒலி, பெருங்குளம் கோ.சிவக்குமார், மரைக்காயர்பட்டினம் பைரோஸ் ஆசியம்மாள், மானாங்குடி பரமேசுவரி, வாலாந்தரவை முத்தமிழ்செல்வி, வெள்ளரிஓடை சந்திரசேகர், வேதாளை செய்யது அல்லாபிச்சை, நொச்சியூரணி சீனி அரசு, ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஹமிதியா ராணி ஜாகீர் உசேன், அத்தியூத்து அப்துல் மாலிக், சித்தார்கோட்டை முஸ்தரி ஜஹான் ஆகியோர் அந்தந்த ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றினர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் செய்திருந்தனர். மேலும் முஸ்லிம் ஜமாத்துக்கள், அனைத்து சமூகத்தினர்களும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

வாகனங்கள்

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சியில் சுதந்திர தின விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் கவுன்சிலர் ஆர்.ஜி.மருது பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைதொடர்ந்து பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சிக்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக வாகனங்கள் பெறப்பட்டு அதற்கான தொடக்க விழா நடந்தது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது மண்டபம், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருது பாண்டியன் முன்னிலையில் கொடி அசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குழந்தை ராணி கண்ணன், எஸ்.ராணி கண்ணன், ரேணுகா, கண்ணன் மஞ்சுளா, ராஜேந்திரன், நாகசவுந்தரம், நாகராஜ், முரளி, திருப்பதி, ஹேமலதா, பாரதி, நர்மதா உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் வினோத் கண்ணன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story