இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவிலில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா தலைவர் வீரையா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் 200 நாள் வேலையும், ரூ.600 கூலியும் வழங்க வேண்டும். இணையதளம் வேலை செய்யவில்லை என்று மதியம் 11 மணி வரை தொழிலாளரை காக்க வைத்து வீட்டுக்கு அனுப்பும் செயலை கைவிட வேண்டும். கிராமசபையில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிமளம் ஊராட்சி ஒன்றியம், இரும்பாநாடு ஊராட்சியில் 1987-ம் ஆண்டு இந்திரா கூட்டு குடியிருப்பு திட்டத்தில் கட்டி கொடுக்கப்பட்ட 20 வீடுகளுக்கும் குடிமனை பட்ட வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட் பத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ், சி.ஐ.டி.யு. கூத்தப் பெருமாள், தமிழ்நாடு விவசாய சங்க அழகர், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் நாகூரம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story