இண்டூரில்அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்


இண்டூரில்அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 17 April 2023 12:30 AM IST (Updated: 17 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இண்டூரில் தண்ணீர் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர செயலாளர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார். இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய அவைத்தலைவர் வேடி, ஒன்றிய துணை செயலாளர் சக்தி, ஒன்றிய பொருளாளர் ரங்கன், மாவட்ட பிரதிநிதி தனபால், நிர்வாகிகள் விஜயன், தேவராஜ், சரவணன், சுப்பிரமணி, சிவா, பிரசாந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story