விபத்தில் 2 பேர் காயம்

பாலக்கோடு:
மகேந்திர மங்கலம் அருகே வேப்பிலைஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி (வயது 42), இவர் அதே ஊரை சேர்ந்த உறவினரான சிவன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொன்டு ஜிட்டான்டஅள்ளி கிராமத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வெள்ளி சந்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிட்டம்பட்டி பிரிவு சாலை அருகே வந்து போது பின்னால் வந்த சரக்கு லாரி, இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





