கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்க வலியுறுத்திஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்க வலியுறுத்திஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்க வலியுறுத்தி, ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தொடங்க வலியுறுத்தி, ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

ஈரோடு கோணவாய்க்கால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் நேற்று திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை தொடங்க வலியுறுத்தி, பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்போது, 'கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை வருகிற 1-ந் தேதிக்குள் தொடங்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 5-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்' என்றனர்.

உடனடியாக தொடங்க வேண்டும்

முன்னதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணனிடம், விவசாயிகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டம் 2020-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

2021-ம் ஆண்டு முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. ஆயக்கட்டில் இல்லாத சிலரால் இந்த பணிகள் முடக்கப்பட்டது.

சீரமைப்பு பணிகள் செய்யப்படாத காரணத்தால் இந்த பாசன ஆண்டில் 4 முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலம் தண்ணீர் இடை நிறுத்தப்பட்டதால் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி பாசன சபைகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, அரசாணைப்படி கால்வாய் சீரமைப்பு பணிகளை மே மாதம் 1-ந்தேதி முதல் தொடங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி ஆணையிட்டது. அதன்படி காலம் தாழ்த்தாமல் சீரமைப்பு பணிகளை வருகிற 1-ந்தேதி தொடங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story