அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு


அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Oct 2023 8:45 PM GMT (Updated: 1 Oct 2023 8:45 PM GMT)

பழனி முருகன் கோவிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் மின்இழுவை ரெயில் வழியாக அடிவாரம் வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து ரோப்கார் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரோப்கார் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் 2-வது ரோப்கார் திட்ட பணிகளின் நிலை குறித்தும் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து அடிவாரம் மின்இழுவை ரெயில்நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்குள்ள 3-வது மின்இழுவை ரெயில் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, செயற்பொறியாளர் நாச்சிமுத்து மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story