பெரியாம்பட்டியில் அரசு பள்ளி சத்துணவு மையங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு

காரிமங்கலம்
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் சத்துணவு மையங்களில் ஆய்வு செய்தனர். அப்போது சமையல் எண்ணெய், உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் தரம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு சரியான முறையில் உணவு தயாரிக்கப்பட்டுள்ளதா? என்பதை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள மளிகை கடை மற்றும் குளிர்பான கடைகள் ஆகியவற்றில் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது சில உணவு பொருட்கள் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





