மின் கம்பங்களில் கேபிள் வயர்கள், பதாகைகளை அகற்ற அறிவுறுத்தல்


மின் கம்பங்களில் கேபிள் வயர்கள், பதாகைகளை அகற்ற அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jan 2023 6:28 PM GMT (Updated: 21 Jan 2023 8:54 AM GMT)

மின் கம்பங்களில் கேபிள் வயர்கள், பதாகைகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் இடையூறாக கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளதால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மற்றும் எரியிழை சரிசெய்யும் பணி மேற்கொள்ளும்போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்தினை தவிர்க்கும் பொருட்டு மின்பாதைகள் மற்றும் மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இறுதி ஊர்வலங்களில் வீசப்படும் மாலைகளின் அதிர்வினால் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு மின்மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் இறுதி ஊர்வலங்களில் மாலைகளை மின்கம்பிகள் மீது வீசாமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story