அகழாய்வு பணிகள் தீவிரம்


அகழாய்வு பணிகள் தீவிரம்
x

சிவகாசி அருகே அகழாய்வு பணிகள் தீவிரமடைந்து உள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 8 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு அதில் தாயக்கட்டைகள், சங்கு வளையல்கள், மண் கிண்ணங்கள், முதியோர்கள் பயன்படுத்திய புகை பிடிப்பான் கருவிகள், கண்ணாடி வளையல்கள், யானைதந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல தொங்கட்டான்கள், கழுத்தணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. நேற்று புதிதாக 9-வது அகழாய்வு குழியில் கண்ணாடியால் செய்யப்பட்ட பாசி மணிகள், நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட தக்களி, உள்ளிட்ட பொருட்களும், மண்பானைகள், கிடைத்துள்ளன. மேலும் பல்வேறு பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.



Next Story