சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணி தீவிரம்


சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணி தீவிரம்
x

தினத்தந்தி செய்தி எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மரங்கள், மின்கம்பங்கள் காற்றின் தாக்குதலால் மிகவும் சேதமடைந்தன.

குறிப்பாக நெமிலி புன்னை கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த 7 மின்கம்பங்கள் தொடர்ச்சியாக அடியோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக மின்சேவை இல்லாமல் உள்ளது என்று கடந்த 11-ந் தேதி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக உதவி மின்பொறியாளர் உலகநாதன், போர்மன் மகேந்திரன், லைன் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் முன்னிலையில் மின்வாரிய தொழிலாளர்கள் 12-க்கும் மேற்பட்டோர் சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story