மின்னல் தாக்கிய மாணவருக்கு தீவிர சிகிச்சை

மேல்மலையனூர் அருகே மின்னல் தாக்கிய மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் விஷால் (வயது 14). இவர் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். விஷால் நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்து தாயனூர் முருகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது விஷாலை மின்னல் தாக்கியது. இந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த விஷாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story