சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்


சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்
x

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு வருகிற 19ம் தேதி நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சென்னை,

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு வருகிற 19ம் தேதி நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு ,

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சமூக நலம் மற்றும் மகளிர் துறையில் அடங்கிய உதவி இயக்குனர்(பெண்கள் மட்டும்) பதவியில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு கடந்த 5.11.2022 அன்று கணினி வழித் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வில் 1444 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு 30 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 19ம் தேதி நடைபெறும்.


Next Story