கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு


கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு
x

திருவண்ணாமலை தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று தொடங்கியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று தொடங்கியது.

திருவண்ணாமலை தாலுகாவில் காலியாக உள்ள 10 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 2 ஆயிரத்து 422 பேர் இணையதளத்தின் மூலமாகவும், 56 பேர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் மொத்தம் 2 ஆயிரத்து 478 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பணியிடத்திற்காக கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வில் இவர்களில் 1714 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இவர்களுக்கான நேர்முக தேர்வு திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நேற்று தொடங்கியது. விடுமுறை நாட்கள் நீங்களாக வருகிற 10-ந் தேதி வரை தினமும் 200 பேர் விதம் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாப்ஜான், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் விண்ணப்பதாரர்களிகள் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, கிராம நிர்வாகம் தொடர்பான கேள்விகள் கேட்டப்பட்டது. மேலும் தமிழ், ஆங்கில வாசிப்பு திறன் கண்டறியப்பட்டது. இந்த நேர்முக தேர்வை திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story