மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஊர்க்காவல் படையில் சேர நேர்காணல்


மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஊர்க்காவல் படையில் சேர நேர்காணல்
x

மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஊர்க்காவல் படையில் சேர நேர்காணல்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகை மாவட்ட ஊர்க்காவல் படையில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சேர வருகிற 3-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நாகை ஆயுதப்படை மைதானத்தில் நேர்காணல் நடக்கிறது. விண்ணப்பதாரர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்து இருக்கலாம். தகுதியுள்ள மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் பட்டியல், ரேசன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், சாதிசான்று ஆகியவற்றுடன் வந்து கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story